சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரணும்.. மகன் சொன்ன தேவையற்ற காரணங்கள்!! ஜிவி பிரகாஷ் தாயார் ஏ ஆர் ரைஹானா..
ஜி வி பிரகாஷ் - சைந்தவி
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் திருமணம் செய்த பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து அறிவிப்பை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் தாயாரான ஏ ஆர் ரைஹானா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மகனின் விவாகரத்து குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், அவர்கள் இருவரும் எடுத்துள்ள முடிவில் ஒரு மீனிங் இருக்கிறது. அவங்கதான் டிசைட் பண்ணாங்க சேரணும்னு, இப்போ அவங்கதான் டிசைட் பண்றாங்க பிரியணும்னு. அவர்கள் சேர்ந்து இருக்கும் போது நான் பிரிக்கணும்னு நினைச்சா முடியுமா? இல்லை சேராதன்னு சொல்ல முடியுமா?.
பிரியாத சேருன்னு சொன்னா அவங்க சேருவாங்களா? இல்லை. சைந்தவி சிறந்த பெண். என் பையனும் சில அட்ஜெஸ்ட் எல்லாம் பண்ணி இருக்கிறான். ஏதோ ஒரு சூழ்நிலை, இறைவனால் ஏற்படுத்தப்பட்டதா? என்ன என்று தெரியவில்லை.
ஜிவி பிரகாஷ் தாயார்
மீண்டும் சைந்தவி வீட்டுக்கு வரணும் என்று கூறியிருக்கிறார். என் மகள் போல் சைந்தவியை பார்த்தேன், சிறந்த பெண். இது பற்றி என் மகனிடம் கேட்டபோது, அவன் சொல்லும் காரணங்கள் எனக்கு உடன்பாடில்லை, வேலிடிடிட்டி இல்லை என்றும் சொல்லமுடியாது.
அவனை நான் கட்டாயப்படுத்த முடியாது. கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவர்களின் பிரிவுக்கு காரணம் கிடையாது என்று ஜிவி பிரகாஷ் குமாரின் தாயார் ரைஹானா தெரிவித்துள்ளார்.