மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு இத்தனை கோடி செலவு செய்யும் அர்ஜுன்!! உண்மையை கூறிய பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அர்ஜுன், தன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஒருசில படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா சரியான வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும் காதலில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த செய்திகள் இணையத்தில் கசிந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் இருவரின் வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 மாதத்திற்கு பின் இருவரின் திருமணமும் பிரம்மாண்ட முறையில் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அர்ஜுன் வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் 3 நாட்கள் கொண்டாட்டத்திற்காக சிறப்பாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
இரு நடிகர்களின் குடும்பம் பெரியது என்பதால் 10, 20 கோடியில் செலவு செய்வார்கள். அப்படி சமீபத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் அர்ஜுன். அந்த இடத்தில் பிரம்மாண்டமாக செட் போட்டு திருமண நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் 3 நாளும் அந்த பகுதியில் இருக்கும் ஏழைகளுக்கு அர்ஜுன் சாப்பாடு போடுவார் என்றும் கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.