500 கோடி வரதட்சணயா? பிரமாண்டமாக நடந்து முடிந்த அர்ஜுன் மகள் திருமணம்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அர்ஜுன். இவரை ரசிகர்கள், ஆக்ஷன் கிங் என்று அழைப்பார்கள்.
இவரது மூத்த மகள் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா, உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில், கடந்த 10ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, நடிகர் அர்ஜுனுக்கு சென்னையில் உள்ள போரூரில் நிறைய இடங்கள் வைத்து இருக்கிறார். ஒரு கிராமத்தையே வைத்துள்ளார். தனி அபார்ட்மெண்ட் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அர்ஜுன் 500 கோடி. 1000 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார். 1000 வகையான சாப்பாடு இருந்தது என்று தகவல் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதெல்லாம் சும்மா இன்டர்நெட்டில் வர கூடிய தகவல். அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை அவர் வைத்து இருக்கும் சொத்து எல்லாமே அவர் மகள்களுக்கு தான் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.