கடற்கரையில் குட்டை ஆடையில் போஸ்.. ஆர்யா முன்னாள் காதலி வெளியிட்ட புகைப்படம்..
நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படியாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்க 18 மாடல் பெண்கள் போட்டிப்போட்டனர்.
ஆர்யாவுக்காக கடுமையாக போட்டிப்போட்டு இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாளப்பெண் சீதாலட்சுமி ஹரிஹரன். மூன்று பேரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று சில காரணங்களை கூறி ஆர்யா தப்பித்துவிட்டார்.
ஆர்யா மீது அதிக ஆசையோடு பல கனவுகளுடன் வந்தேன் என்று கூறி இருந்தார் சீதாலட்சுமி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு மாடலிங் துறையில் கவனம் செலுத்து சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
க்ளாமர் ஆடையணிந்து அவர் வெளியிட்டு புகைப்படத்திற்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. அந்தவகையில், பாங்காக் ட்ரிப் சென்றுள்ள சீதாலட்சுமி கடற்கரையில் குட்டை ஆடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி என்று ஷாக்காகி வருகிறார்கள்.