நயன்தாரா பேரை சொன்ன இயக்குனர்!! தலைக்கேரிய கோபத்தில் கேரவனில் நடிகை அசின் செய்த காரியம்
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, அசின், நயன் தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் கஜினி. இப்படத்தை 16 ஆண்டுகள் கழித்து ரீலிஸ் செய்து நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அசின் இப்படத்தில் செய்த டார்ச்சரால் முருகதாஸ் கஷ்டப்பட்டுள்ளார்.
1 நாள் இரவு 9 மணியில் இருந்து காலை 2 மணி வரை எக்மூர் ரயில் நிலையத்தில் தயாரிப்பாளர்கள் அதிக செலவு செய்து ஒரு காட்சியை எடுக்க நினைத்துள்ளனர். சிகப்பு விளக்கு இடத்தில் மாட்டிய பெண்களை அங்கிருந்து அசின் மீட்டு ரயிலில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் காட்சி தான். ஆனால் அந்த காட்சியை ஏ ஆர் முருகதாஸால் எடுக்க முடியவில்லையாம்.
அசினுடன் முருகதாஸ் இரவு சாப்பாட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நயன் தாராவுக்கு ஒரு சாங் வைத்திருந்தார் முருகதாஸ். அப்போது அசின், இன்னொரு சாங் எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்று முருகாஸிடன் கேட்டிருக்கிறார். அது உங்களுக்கு இல்லை நயன் தாராவுக்கு மேடம் என்று சொன்னதும் முகம் மாறி அதை காமித்துக்கொள்ளாமல், கேரவனுக்குள் சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரமாக அசின் கதவை திறக்கவில்லையாம். 2 மணி நேரம் கழித்து எனக்கு வயிற்று வழி என்னால் நடிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார் அசின். அந்த காட்சியை அப்படியே மாற்றி சமாளித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். அப்படியொரு சம்பவத்தை அசின் செய்ததால், முருகதாஸ் இன்று வரை கோபத்தில் இருக்கிறாராம் என்று அந்தணன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.