விஜய்யின் சுக்கிரன் சிவகார்த்திகேயன்க்கு தான்.. சூர்யாலாம் கிடையாது!! பிரபல ஜோதிடர் கொடுத்த ஷாக்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட தென்னிந்திய ஹீரோவாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், சமீபகாலமாக அரசியல் நுழைவு குறித்த வேலைகளில் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தன் கட்சிக்கு வைத்து அறிமுகம் செய்து வைத்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், கமிட்டாகி படங்களை முடித்துவிட்டு முழு அரசியல் வேலைகளை மக்களின் நலனுக்காக சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய் சினிமாவில் இருந்து சென்றுவிட்டால், அவருடைய இடத்தினை தமிழ் சினிமாவில் யார் பிடிப்பார்கள் என்று சினிமா ரசிகர்கள் மீது கேள்வி எழுந்துள்ளது. அப்படி சிலர் சிவகார்த்திகேயன், சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் பெயர்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல ஜோதிடன் சீதா சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தளபதி என்ற டைட்டிலை யாருக்கு சேரும் என்பதை பகிர்ந்துள்ளார்.
சினிமா என்றாலே சுக்கிரன் தான் ஆளுமை. சுக்கிரன் புதனுடன் சேர்ந்து காமெடியை கொடுக்கும். அப்படி நடிகர் விஜய் அளவிற்கு சுக்கிரன் சிவகார்த்திகேயனுக்கு தான் இருக்கிறது, அவர் வரலாம். இதையே சூர்யாவின் தம்பிக்கு வரும், சூர்யாவுக்கு வராது. நடிகர் அஜித்தை பொறுத்தவரை என்றால், விஜய்க்கு ஆதரவும் தெரிவிக்க மாட்டார், எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டார். அவர் தனி வழியாக செல்வார் என்றும் அஜித் அரசியல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
அஜித்திற்கு சனி பலன் இருக்கிறது, அதனால் தான் விபத்து ஏற்பட்டு பல இடங்களில் அடி ஏற்பட்டது. அரசியல்லுக்கு வரவோ, சினிமாவில் தொடர்ந்து நடிக்கவோ விரும்பவில்லை, எதையாவது செய்யனும் என்று ஆசையில் இருப்பார், செய்வார், மறந்தும் விஜய்க்கு ஆதரவு என்று கூறமாட்டார் என்று ஜோதிடர் சீதா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். பாமர மக்கள், படித்த மாணவர்கள், மாற்றத்தை வேண்டும் என்பவர்கள் தான் ஆதரவு அளிப்பார்கள். விஜய் இருக்கும் போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறுவதை போன்று அவருக்கு அடுத்து யார் பெயர் என்ற கேள்விக்கு, சிவகார்த்திகேயன், தனுஷ் இருப்பார். அந்த வாய்ப்பை சிம்பு கைவிட்டுவிட்டார்.
