ஏன்டா அரசியலுக்கு வந்தோம்னு கதறி அழுவாங்க..திரிஷாவுக்கு கல்யாணம் நிலைக்காது!! ஜோதிடர் உடைத்த உண்மை..
பிரபல ஜோதிடரான ஷெல்வி, நடிகர் விஜய், முதலமைச்சராவார் என்று கணித்தது நிஜமானதை தொடர்ந்து பலருக்கும் ஜோதிடம் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. தற்போது, ஜோதிடர் ரேவதி ராஜேஷ்கண்ணா, திரிஷாவின் திருமணம், அரசியல் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில், திரிஷா அரசியலுக்குள் வந்தால் அவருடைய ஜாதகம் அதற்கு முழுமையாக ஆதரவாக இருக்கிறது.
அரசியலுக்கு வந்தோம்
தற்போதைய நேரத்தில் அவருக்கு அரசியல் ரீதியாக மிகவும் சாதகமான சூழல் உள்ளது, ஆனால், எதிர்காலத்தில் குறிப்பாக 2030-க்கு பின் அவர் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது எதற்காக அரசியலுக்கு வந்தோம் என்று கதறி அழக்கூடிய அளவுக்கு பெரிய சோதனைகள் வர வாய்ப்புள்ளது.

சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் திரிஷாவுக்கு, தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் ஏன் இவ்வளவு தடைகள் வருகிறது என்பது குறித்து பேசிய ரேவதி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா இருப்பதற்கு சுக்கிரனின் உச்ச பலமே காரணம். சுக்கிரன் புகழ், பணம், கண்ணியம், திருமணம் ஆகியவற்றிக்கு உரியவர். திரிஷாவின் ஜாதகத்தில் புகழுக்கான காரகம் வலுவாக இருப்பதால் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறார்.
திரிஷாவுக்கு கல்யாணம்
மகர ராசியை சேர்ந்த திரிஷாவுக்கு காலசர்ப்ப தோஷம் அல்லது ராகு - கேது பாதுப்புகள் இருப்பதால் திருமணம் நிச்சயமாகும் நிலைக்கு சென்று நின்றுபோனது. அப்படித்தான் அவருடைய நிச்சயம் நடந்து நின்றுபோனது.
இனிமேல் திரிஷா திருமணம் செய்துகொண்டாலும், அது பெயருக்கான திருமணமாக மட்டுமே இருக்குமே தவிர, கணவன் - மனைவிக்குள் முழுமையான ஆத்மார்த்தமான, அந்நியோன்யமான வாழ்க்கையாக அந்த திருமண வாழ்க்கை இருக்காது. மகர ராசியை பொறுத்தவரை ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால் அதை விடாமல் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதேபோல் பிடிக்காத விஷயம் என்றால் அதில் இருந்து சரியாக விலகிவிடுவார்கள்.

தங்களுக்கு பிடித்த விஷயத்தை அடைவதில் மகர ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். சில நேரங்களில் சுயநலமாகவும் செயல்படுவார்கள். மகர ராசிக்குள் உத்திராடம், திருவோணம், அபிஜித் ஆகிய நட்சத்திரங்கள் இருப்பதால், குறிப்பிட்ட கிரகங்களின் ஆதிக்கம் மகர ராசிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும், அதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை நினைத்தால் அதை ஆக்கவும் முடியும், தேவையில்லை என்றால் அழிக்கவும் குணம் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று ஜோதிடர் ரேவதி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.