தயாரிப்பாளரை படம் ரிலீஸ்க்கு முன்பே மொட்டை போட வைத்த சியான் சிக்ரம்!! அட இந்த சம்பவம் வேறயா..

Vikram Gossip Today
By Edward Mar 13, 2024 03:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து தற்போது டாப் இடத்தினை பிடித்தவர் நடிகர் சியான் சிக்ரம். கல்லூரி முடித்து சில வருடங்கள் போராடியும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் மீரா, தந்து விட்டேன் உன்னை போன்ற படங்களை நடித்தும் படம் சரியாக ஓடாமல் போனது. நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த போது சேது படம் ஹிட்டாகியது.

அதன்பின் அவர் நடிப்பில் சாமி வெற்றி படமாக மாறி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை 90களில் கிடைத்தது. அப்போதைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக பிரசாந்த், அஜித், அப்பாஸ், வினித் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வந்தார் விக்ரம். சில ஹீரோக்களின் தம்பியாகவும், இரண்டாம் ஹீரோவாகவும் நடித்து வந்த விக்ரமிற்கு சேது படம் மாற்றியதை போன்று பிதாமகன் படம் தேசிய விருது வரை கொண்டு சேர்த்தது. அதன்பின் நடித்த பல படங்கள் மூலம் உடலை உருக்கி நடித்திருந்தார்.

அது முதல் தற்போது பொன்னியின் செல்வன் படம் வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் இயக்குனர் சரண் இயக்கத்தில் 2002ல் ஜெமினி படத்தில் நடித்திருந்த விக்ரம் நல்ல படமாக அவருக்கு அமைந்தது. ஆனால், இப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்தார். படத்தின் பல பாடல்களால் தான் ஜெமினி படம் மிகப்பெரிய இடத்தை பிடித்தது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் மீது பயந்து போய்விட்டார்களாம். படம் தோல்வி அடைந்தால், என்ன செய்வது என்று நினைத்து படக்குழுவை அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று எல்லோரையும் மொட்டை போட வைத்திருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனம். படம் வெளியாகும் முன்பே மொட்டை போட வைத்த பங்கு விக்ரமிற்கு சென்றாலும் படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.