மனைவியின் தாய்ப்பால் பாட்டிலை திருடி மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்!! அதிர்ச்சி கொடுத்த மனைவி தாஹிரா..
ஆயுஷ்மான் குர்ரானா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா 2008ல் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஹிரா காஷ்யப்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மகள் ஒரு மகனை பெற்றெடுத்த தாஹிரா, கடந்த 2021ல் ஒரு தாயாக இருப்பதன் 7 பாவங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், தனது ஏழு மாதக் குழந்தைக்காக தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்துவைத்து இருந்ந்தேன்.
அப்போது தனது கணவர் ஆயுஷ்மான் குர்ரானா ஊட்டச்சத்துக்காக, தாய்ப்பாலை திருடி புரோட்டீன் ஷேக்காக பயன்படுத்தியதை அந்த புத்தக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
மனைவி தாஹிரா
படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த கணவரிடம், தாய்ப்பால் பாட்டிலை காணவில்லை என்று கேட்டேன் அவர் அதற்கு சிரித்தபடி மீசையை துடைத்துக்கொண்டே, சரியான வெப்பநிலை இருந்தது என்றும் அதிக சத்தானதாக அது இருந்ததால் அதை குடித்துவிட்டதாக கூறினார்.
அன்றில் இருந்து ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது தாய்ப்பால் பாட்டிலை திருடாமல் இருக்க மறைத்து வைத்ததாகவும் தாஹிரா அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.