சோழன விட்டுட்டு போகமாட்டேண்ணே!! அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலில் தற்போது சேரன் - சந்தா இருவரின் திருமணம் கோலகலமாக நடக்கவுள்ளது. ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லை என்பதால் என்ன செய்வது என்று புலம்பினார்கள்.

இதனையடுத்து இன்றை எபிசோட்டின் பிரமோ வீடியோவில், சேரன் சோகமாக வெளியில் உட்கார்ந்திருப்பதை பார்த்த, நிலா காலைல்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்டார்.
அதற்கு சேரன், இந்த கல்யாணம் நடந்தா நீ வீட்டைவிட்டு போயிடுவேன்னு நீ சொன்னல்லப்பா, இந்த கல்யாணம் நடக்குறதுனால நீ வீட்டைவிட்டு போய்டுவன்னா நான் கல்யாணமே பண்ணாம இருக்கேன் என்று சொல்கிறார்.
சோழன விட்டுட்டு
உடனே நிலா, நான் போகமாட்டேன், என்ன ஆனாலும் சரி, இந்த வீட்டைவிட்டு, உங்களை விட்டு சோழன விட்டுட்டு போவன்னு நினைச்சதில்லை, இப்போ இந்த வீட்டில் ஒரு ஆளாகிட்டேன், இந்த வீட்டைவிட்டு போறதப்பத்தி யோசிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் சேரனும், பக்கத்தில் இருந்து கேட்ட சோழனும் ஹாப்பியாகிவிடுகிறார்கள். நிலா இப்படி பேசியிருப்பது சீரியலின் எதிர்ப்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.