சீரியலில் இருந்து விலக இந்த இருகாரணங்கள் தான்! உண்மையை உடைத்த பாக்யலட்சுமி நடிகை
பிரபல தொலைக்காட்சி சேனலில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் பாக்யலட்சுமி தொடர். இல்லத்தரசிகள் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனிபர் விலகியுள்ளார்.
மற்றொரு தொலைக்காட்சி சீரியலை ஆரம்பித்ததால் அதில் நடிக்க சென்றுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இது குறித்து விளக்கத்தை இரு காரணமாக கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஜெனிபர்.
கணவருடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய தனிப்பட்ட காரணமாக ஒன்று இருப்பதாகவும், மேலும் இனி வரும் எபிசோட்டில் தன்னுடைய கதாபாத்திரம் நெகடிவ் ரோலாக மாறும் என்பதால் அது எனக்கு வேறுமாதிரியான தோற்றத்தை காட்டும் என்பதால் அதிலிருந்து விலகினேன்.
நான் விலகியதால் ரசிகர்கள் சீரியலை பார்க்காமல் இருக்கவேண்டாம். தொலைக்காட்சி மீதோ சீரியல் பிரொடக்ஷன் மீதோ எனக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும், ராதிகா கதாபாத்திரத்திற்கு பிக்பாஸ் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..