நல்லவேளை பப்லுவை கல்யாணம் பண்ணல.. பட்டதே போது!! மனவேதனையில் பேசிய ஷீத்தல்..

Gossip Today Actors Babloo Prithiveeraj
By Edward Aug 22, 2024 06:15 PM GMT
Report

பப்லு பிரித்விராஜ்

சின்னத்திரை சீரியல்களிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். சமீபத்தில் பாலிவுட்டில் உருவாகி சர்ச்சையை ஏற்படுத்திய அனிமல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

நல்லவேளை பப்லுவை கல்யாணம் பண்ணல.. பட்டதே போது!! மனவேதனையில் பேசிய ஷீத்தல்.. | Babloo Prithviraj Ex Lover Seethal Broke Up Reason

50 வயதை தாண்டிய பிரித்விராஜ், முதல் மனைவியை விவாகத்து செய்து தன் மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் ஷீத்தல் என்பவரை காதலித்து லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். இவர்களின் காதலை பலர் விமர்சித்து பேசியதற்கு பிரித்விராஜும் ஷீத்தலும் பதிலடி கொடுத்தும் வந்தனர். அதன்பின் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமுகவலைத்தள பக்கங்களில் இருந்து டெலீட் செய்துவிட்டனர்.

ஷீத்தல்  பேட்டி

இந்நிலையில், பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்து வந்தநிலையில் ஷீத்தல் ஒரு பேட்டியொன்றில் பிரிவு பற்றி விளக்கம் கொடுத்து பேசியிருக்கிறார். எங்களுக்குள் என்னவேணாலும் நடந்திருக்கலாம், ஆனால் அதுஒரு விஷயமே இல்லை. ஒரு கட்டத்துல் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவரும் பிரிந்துவிட்டோம்.

நல்லவேளை பப்லுவை கல்யாணம் பண்ணல.. பட்டதே போது!! மனவேதனையில் பேசிய ஷீத்தல்.. | Babloo Prithviraj Ex Lover Seethal Broke Up Reason

அதுமட்டுமின்றி காதலிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த அத்தனை பொருட்களையும் பிரித்விராஜிடமே நான் கொடுத்துவிட்டேன். பிரபோஸ் செய்து மோதிரம் போட்டதையும் கொடுத்துவிட்டேன். நல்லவேலை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை, அதுவரைக்கும் சந்தோஷம். ஏனென்றால் எங்களுக்கு திருமணம் நடந்திருந்தால் அது ஒரு வீட்டாரையும் பாதிக்கும். அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

லிவ்விங்கில் இருக்கும் போது திருமணத்திற்கு வயது பிரச்சனை இல்லை சொல்லியிருந்ததை போல் இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். வயது என்பது ஒரு நம்பர்தானே தவிர உண்மையான மனதுதான் காரணம். சில காரணங்களை வெளிப்படையாக சொல்லமுடியாது. வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஷீத்தல் கூறியிருக்கிறார்.

நல்லவேளை பப்லுவை கல்யாணம் பண்ணல.. பட்டதே போது!! மனவேதனையில் பேசிய ஷீத்தல்.. | Babloo Prithviraj Ex Lover Seethal Broke Up Reason

வேறொருவர் உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஒருத்தரை வைத்து பட்டதே போதும், இனி என் வாழ்க்கையில் இன்னொரு நபர் என்பதே கிடையாது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் ஷீத்தல்.