பக்தி சூப்பர் சிங்கர்!! அம்மன் பாடலால் உருகிய பின்னணி பாடகி நித்யஸ்ரீ..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ளனர். தெய்வீகக்குரலுக்கான பிரம்மாண்ட தேடலின் ஆடிஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.
புதிய தொகுப்பாளர்கள், புதிய நடுவர்களுடன் கூடி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடுவராக பின்னணி பாடகி நித்யஸ்ரீயுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் அம்மன் பாட்டு பாடு அசத்திய கார்த்திக் என்ற போட்டியாளரால் வியந்து போயிருக்கிறார் நடுவர் நித்யஸ்ரீ. அதிலும் போட்டியாளர் கார்த்தியின் மனைவி, அவருக்கு எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடவுள் இருக்கிறாரான்னு நினைத்து சோர்ந்து போய்விட்டார் என்று பேசியது அனைவரையும் உருக வைத்திருக்கிறது.