ரம்யா கிருஷ்ணன் கணவரின் முதல் காதலி இந்த நடிகையா!! பிரேக்கப்பிற்கு காரணம் இதுதானாம்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அந்தஸ்த்தைபெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி, ராஜமாத சிவகாமி தேவி போன்ற பெயர்களால் புகழப்பட்டார்.
யூகிசேது என்பவருடன் திருமணமாகி பிரிந்து விவாகரத்து பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னை வைத்து இரு படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் கணவர் பற்றிய ரகசியம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பானு ப்ரியா, ஆதர்ஷ் கெளசல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகினார். அதன்பின் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போது இயக்குனர் கிருஷ்ண வம்சி பானு ப்ரியாவை இரண்டாவதாக திருமணம் செய்ய நினைத்து அவரை துரத்தி துரத்தி காதலித்திருக்கிறார்.
ஆனால் பானு ப்ரியா வம்சியை திருமணம் செய்ய முடியாது என்று சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை அவர் கூற மறுத்துவிட்டார். அதன்பின் தான் கிருஷ்ண வம்சி நடிகை ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்துள்ளார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.