வாஸ்து பிரச்சனையா! தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு இதுதான் நடந்ததாம்? பயில்வான்..

dhanush rajinikanth tamilcinema bayilvan aiswarya
By Edward Jan 19, 2022 06:05 AM GMT
Report

இந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது பிரபலங்களின் விவாகரத்து செய்திகள். சமந்தாவை தொடர்ந்து தற்போது தனுசு-ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி தான் தற்போது டிரெண்டிங். அப்படியாக இருவரின் விவாகரத்துக்கு பலர் பல கருத்துக்களை கூறி வருவதை போன்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இதுபற்றி சில தகவல்களை கூறியுள்ளார்.

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க சூப்பர் ஸ்டார் திருமணத்தை செய்து வைத்தார். இது பற்றி நாங்கள் ரஜினியிடம் கேட்டபோது அதை பரப்பியதே நீங்கள் தானே என்று ரஜினி செய்தியாளர்களிடம் கூறினாராம். அதன்பி சம்மந்திகள் கஸ்தூரிராஜாவும் ரஜினிகாந்தும் பேசிக்கொண்டதே கிடையாதாம். அதேபோல் திருமணத்திற்கு பிறகு தனுஷிற்கு ஐஸ்வர்யாவுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாம்.

தனுஷ் குலத்தெய்வ கோவிலுக்கு கூப்பிட்டும் ஐஸ்வர்யா வரமாட்டாராம். முன்னதாக தேனியில் இருக்கும் கஸ்தூரிராஜா பெயரில் தியேட்டரில் ஏற்பட்ட கடனால் அடைக்கமுடியாமல் தினறினார். கடன் கொடுத்தவரிடம் சூப்பர்ஸ்டாரின் சம்மந்தி என்று கூறியுள்ளார்.

அவர் அப்படி கூறி சில நாளில் சூப்பர் ஸ்டார் எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியது பெரிய பிரச்சனையாக இருந்தது. அதன்பின் நடிகைகளுடன் தனுஷ் ஏற்படுத்திய சவகாசத்தால் மகளுக்காக போயஸ் தோட்டத்தில் இடம் வாங்க தனுஷிற்கு வலியுறுத்தினார்.

தனுஷும் அப்படியாக இடம்வாங்கி கட்டடம் கட்ட பூஜை நடத்தினார்கள். ஆனால் வாஸ்துபடி இடம் சரியில்லை என்று ரஜினியிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் தனுஷ் இதை கேட்காமல் வீட்டினை கட்டி வருகிறாராம்.

அப்பவே ரஜினி வாஸ்து சரியில்லை என்று கூறியது தற்போது நிஜமாகிவிட்டதே. 3 படத்தினை தொடர்ந்து காலா படத்திலும் நஷடத்தை சந்தித்த தனுஷ் பல படங்களில் அந்த கடனை அடைக்க உழைத்து வந்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத சூப்பர் ஸ்டாரை பார்க்க ஐஸ்வர்யா அவ்வப்போது சென்றதாலும் தனுஷிற்கு அதுபிடிக்காமல் போனதே காரணமாக அமைந்தது விவாகரத்து.