விஜய் பட நடிகை கௌசல்யாவின் மறுபக்கத்தை உடைத்த பயில்வான்.. ஷாக்கிங் நியூஸ்
நடிகர் நடிகைகளின் தனிபட்ட வாழ்க்கை விஷயத்தை பொது வெளியில் சொல்லி பெரும் சர்ச்சை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், நடிகை கௌசல்யா குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர். 90களில் மிகவும் ஒல்லியான ஒரு நடிகை கௌசல்யா தான். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே சதைப்பிடிப்பு இல்லாமல் அப்படித்தான் இருந்தார். சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த கௌசல்யாவுக்கு ஒரு கட்டத்தில் தோல்வி படங்களை கொடுத்ததால் பட வாய்ப்பு குறைந்துவிட்டது.
அதுமட்டுமின்றி திடீரென அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாதது போல மாறிவிட்டார். இப்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். கௌசல்யா 45 வயதான பிறகும் திருமணத்தில் விருப்பம் இல்லை.
திருமணம் குறித்து கேள்வி கேட்டால் இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நான் எப்படி இருக்க விரும்புகிறேன் என்று கௌசல்யா சொன்னதாக பயில்வான் கூறியுள்ளார்.