48 வயதில் நடிகை நக்மாவுக்கு வந்த ஆசை!! கண்டமேனிக்கு பேசிய பிரபல நடிகர்..
90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை நக்மா தற்போது மும்பையில் செட்டிலானதோடு, அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். 49 வயதாகும் நடிகை நக்மா இன்று வரை திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் 4 பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது தானாம்.
நடிகை நக்மாவின் ஆரம்பகாலக்கட்டத்தில் தமிழில் நடித்த போது நடிகர் சரத்குமாருடன் நடித்திருந்தார். அப்போதைய பத்திரிக்கையில் இருவரும் ஜோடியாக நடித்து நெருக்கமாக இருப்பதை பரபரப்பு செய்தியாக வெளியிட்டனர். அதுமட்டுமில்லாமல் ECR பகுதியில் ஆடம்பர பங்களாவில் இருவரும் சேர்ந்து வசித்ததாகவும் ஆணித்தரமாக கூறினார்கள்.
இந்நிலையில் நக்மா பற்றிய மற்றுமொரு தகவல் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. பத்திரிக்கையாளர் பயில்வான் சமீபத்தில் அளித்த பேட்டியில், 48 வயதில் நக்மாவிற்கு திருமண ஆசை வந்துள்ளது.
இதற்கு தான் பெண்களை பருவத்தில் பயிர் செய் என்றார்கள். ஆனால் நக்மாவுக்கு திருமணம் செய்ய வேண்டிய வயசை எல்லாம் விட்டுவிட்டு இப்போது திருமணம் செய்ய ஆசை, குழந்தை பெத்துக்கனும் என்று ஆசை வந்திருக்கிறது.
48 வயது கிழவியை எந்த தொழிலதிபர்கள் தான் திருமணம் செய்ய முன் வருவார்கள், முடிஞ்சா திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பயில்வான் பேசியிருக்கிறார். தற்போது 49 வயதாகிய நடிகை நக்மா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.