சர்ப்போர்ட் செய்த ஜோதிகா.. ஜெயிலுக்கு போவன்னு சுசித்ராவை கண்டபடி பேசிய பயில்வான்..

Suriya Jyothika Bayilvan Ranganathan Suchitra Kanguva
By Edward Nov 19, 2024 07:30 AM GMT
Report

சுசித்ரா

சில நாட்களுக்கு முன் தங்களுடைய ஆவணப்படத்தின் டிரைலர் வீடியோவை நயன் தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். அந்த வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நொடி காட்சி இருந்ததால் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு தொடுத்தனர்.

இதனால் கோபப்பட்ட நயன்தாரா, தனுஷை மோசமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். தற்போது தனுஷ் - நயன் தாரா பிரச்சனைதான் சினிமாத்துறையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பலவிதமாக கருத்துக்களை பிரபலங்கள் பேசி வருகிறார்கள். தற்போது பின்னணி பாடகி சுசித்ரா தன் பங்கிற்கு சில கருத்துக்களை கூறி தனுஷை மோசமாக பேசியிருக்கிறார்.

50 படம் நடித்திருக்கிறாரா? ஒரு படத்தில் 3 நடிகைகள் என்று பார்த்தால் 150 நடிகைகள், அம்மா கேரக்டர் உட்பட, எல்லா தொல்லையும் கொடுத்திருக்கிறார். உடல் ரீதியாக, தொழில் ரீதியாக, தனிப்பட்ட விஷயம் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார் தனுஷ். சைக்கோ என்பதால் இப்படி செய்கிறார் என்று சுசித்ரா பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து ஜோதிகா பேசியதற்கு கண்டபடி பேசி வீடியோ வெளியிட்டார் சுசித்ரா.

சர்ப்போர்ட் செய்த ஜோதிகா.. ஜெயிலுக்கு போவன்னு சுசித்ராவை கண்டபடி பேசிய பயில்வான்.. | Bayilvan Talks About Singer Suchitra Bad Speech

கங்குவா - ஜோதிகா

இதனை கண்ட பயில்வான் ரங்கநாதன், எந்தவகையில் சுசித்ராவுக்கு கங்குவாவிற்கும் தொடர்பு இருக்கிறது, தேவையில்லாத வேலை செய்கிறார். சென்னையில் பல கோடி சொத்து இருக்கும் ஜோதிகாவை பிச்சைக்காரி என்று சொல்லி இருக்கிறார்.

ஜோதிகா வழக்கு தொடர்ந்தால், கஸ்தூரி போல் சுசித்ராவும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும், யாரின் பிரச்சனைக்கும் போகாமல் சூர்யாவின் குடும்பம் ரொம்ப அமைதியாக இருக்கிறார்க்ள். இவர்களின் குடும்பம் குறித்து சுசித்ரா தேவையில்லாத வேலையாக பேசுகிறார். ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார் என்று காட்டமாக பேசியிருக்கிறார் பயில்வான்.