பள்ளி மாணவர்கள் கூல் லிப் போடுறாங்க.. குடிக்காதவர்களை பார்த்து சிரிக்கிறாங்க!! வேதனையில் பிக்பாஸ் பிரபலம்..
தமிழ் நாட்டில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவது பல இடங்களில் நடக்கும் சமபவங்களால் வெளிச்சத்திற்கு வருகிறது. அபடி பள்ளி மாணவர்கள் கூல் லிப் என்ற போதைப்பொருளை பயன்படுத்துவது குறித்து நடிகருன் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி வேதனையுடன் பேசியிருக்கிறார்.
சேலத்தில் நடந்த தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆரி, ஆரோக்கியமான வாழ்வு அமைய உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இன்றைய காலத்தில் குடிக்கிற சமூகம் அதிகரித்துவிட்டதால் குடிக்காதவர்களை பார்த்தால் காமெடியனாக தெரிகிறது.
ரீல்ஸ் எடுக்க தெரிந்தவர்களை தான் இன்றைய பெண்கள் கணவனாக தேர்வு செய்து தங்கள் மனதை பரிகொடுக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் அதிகமாக கூல் லிப் புகையிலையை பயன்படுத்துகிறார்கள்.
பள்ளியிலேயே மாஃபியா உருவாகிவிடுமோ என்ற பயம் இயல்பான மனதில் தோன்றுகிறது. இதை தடுக்க பள்ளி மாணவர்களுக்க்ம் ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆரி அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.