விஜயகாந்த மறைவுக்கு 2 நாட்களுக்கு முன் செய்த செயல்!! கண்ணீருடன் பகிர்ந்த மகன்..
ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் என்றால் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறப்பு தான். பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் திடீரென் மரணமடைந்ததற்கு பல பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.
நேற்று விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டத்தை நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. கமல், விஷால், நாசர், ராதா ரவி, கார்த்தி, சிம்ரன், தேவயானி, சிக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேடையில் ஏறி அவரது மகன் விஜய பிரபாகரன் கண்ணீருடன் பேசியது அனைவரையும் உருகவைத்திருக்கிறது.
ஆரம்பத்தில் கண்கலங்கி பேசி உணர்ச்சிவசப்பட்ட விஜய பிரபாகரன், என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட என் அப்பாவின் முகத்தைதான் அதிகமாக பார்த்து வளர்ந்திருக்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியே எங்களை வளர்த்ததால் தான் இன்றளவும் அவரது நினைவிடத்தில் வைத்து சாப்பாடுகள் கொடுத்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஊடகங்கள் அவருக்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை என்றும் மறதி இருப்பதாகவும் எழுதி வந்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு இரு நாட்கள் முன் டிசம்பர் 25 ஆம் தேதி, அவரது டிரைவரை அழைத்து அவர் நடித்த படங்களின் பாடல்களை போட்டு கேட்டிருக்கிறார்.
இது எனக்கு தெரியாது. டிரைவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. பின் சிசிடிவியில் பார்க்கும் போது விஜயகாந்த் பாடல்களை கேட்டு கையில் தாளம் தட்டி ரசித்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.