போதைக்கு அடிமையாகி ரோஹித்தால் கர்ப்பை இழந்த வெண்பா.. எல்லைமீறும் சீரியல் காட்சி..
சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது வில்லி வெண்பாவின் திருமண சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்று வருகிறது.
பாரதி நினைத்து ரோஹித்துடன் வரவேற்பு நிகழ்ச்சியில் அவருடன் ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார் வெண்பா. இதனால் உறவினர்களும் சந்தோஷப்பட, பாரதி ஒருபுறம் தன் மகள் ஹேமாவை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெண்பாவும் ரோஹித்துடன் மது குடித்து ஃபுல் போதையில் தன்னிலை அறியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பாரதி என்று ரோஹித்தை நினைத்து கொண்டிருக்கும் வெண்பா அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

அனைத்தையும் மீறி ரோஹித், வெண்பாவும் தவறு செய்துவிடுகிறார்கள். பின் குடிபோதையால் தன் கர்ப்பை ரோஹித்திடம் இழந்ததை வெண்பா உணர்கிறார்.
இப்படி செய்வதறியாமல் திகைத்துப்போன வெண்பா முடித்து என்ன செய்வது என்று புலம்பி வருகிறார். இப்படி அடுத்தடுத்த அதிரடி காட்சியை வைத்துள்ள சீரியலை கடுமையாக விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.