குடும்பத்தை பகைத்துக் கொண்டு மாயாவுக்கு ஜால்ரா போடும் விக்ரம்!! தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..
பிக்பாஸ் 7 சீசன் தற்போது விறுவிறுப்பான இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. எலிமினேட்டாகிய போட்டியாளர்கள் மீண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பல விசயங்களை பேசி வருகிறார்கள். அதேபோல் தான் எவிக்டாகிய சரவணன் விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ஏற்கனவே மாயா கேங்க் உடன் சேர்ந்து பல விசயங்களில் பெயரை கெடுத்துக்கொண்ட விக்ரம், மீண்டும் வீட்டிற்கு வந்தும் அதேயே செய்து வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் பலர் விக்ரமை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விக்ரம் தங்கை பேமிலி சுற்றில் வீட்டிற்குள் வந்து, மாயாவை நம்பாதே என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது கூட அதை செய்து வருவதால் விக்ரம் தங்கையும் அவர்கள் குடும்பமும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
அதற்கு காரணம் விக்ரம் தங்கை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், உங்களின் சொந்த குடும்பத்தைவிட வேறொருவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.
இது இணையத்தில் வைரலாக இதுபற்றி நெட்டிசன்கள் மீண்டும் விக்ரமை கலாய்த்தும் திட்டியும் வருகிறார்கள்.
