விவாகரத்துக்கு பின் இரண்டாம் கல்யாணம்!! சீக்கிரம் அப்பாவாக ஆசைப்படும் பிக்பாஸ் பிரபலம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலமாகி நல்ல இடத்தினை பிடித்து வருகிறார். அந்தவகையில் யூடியூப் சேனல்களில் சினிமா படங்களை விமர்சித்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பிரபலமான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று வந்து அபிஷேக், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வந்தார். 2017ல் ஒரு பெண்ணை திருமணம் செய்த அபிஷேக் ராஜா 2 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் ஸ்வாதி என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மனைவி குறித்து திருமண வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்துள்ளார் அபிஷேக் ராஜா. விவாகரத்துக்கு பின் தனியாக இருந்தபோது சில விஷயங்கள் நடந்தது.
அதனால் நான் சீக்கிரம் அப்பாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு கல்யாணம் பண்ணால் தான் குழந்தை பெற முடியும் என்று இந்த சமூதாயம் கூறுகிறது என்று பிக்பாஸ் அபிஷேக் ராஜா மனைவியுடன் இணைந்து இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.