வாய்ப்பிற்காக இப்படி இறங்கிட்டாங்களே! பிக்பாஸ் லாஸ்லியா போட்டோஷூட்டால் ஷாக்காகும் ரசிகர்கள்..
இலங்கையில் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் தான் லாஸ்லியா.
அப்படி வாய்ப்பு தேட தோழியுடன் வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வந்த லாஸ்லியா, கவினுடன் காதலில் சிக்கி பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகினார்.
அதன்பின் கவினை கண்டுக்கொள்ளாது தன் கேரியரில் கவனம் செலுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில மாதங்களிலேயே லாஸ்லியாவின் தந்தை மரணம் அவரை சோகத்தில் ஆழ்த்தியது. இதன்பின் அந்த இழப்பில் இருந்து மீண்டும் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார்.
அவர் நடிப்பில் இரு படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் விளம்பரங்கள் என்று வெளியாகியது. பின் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறினார்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கும் லாஸ்லியா ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கண்ணாடி அணிந்து போட்டோஷுட் எடுத்து பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


