Biggboss 8 : நீங்க கத்தும் போது நான் ஏன் கேட்கணும்!! ஜாக்குலினுக்கும் பவித்ராவுக்கு வெடித்த சண்டை..
பிக்பாஸ் சீசன் 8
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் நேற்று அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
பிக்பாஸ் ஆரம்பித்து ஒரு நாள் முடிவதற்குள் சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் தான் விளையாடப்போகிறார்கள், அதற்காக தான் வீடும் இரண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்து பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
Day 2 பிரமோ
இன்று இரண்டாம் நாளில், இரண்டாவது நாளில் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்றும், ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு ஒருவர் செல்லவேண்டும், அதனை அந்தந்த அணியே சேர்ந்து முடிவு எடுத்து சொல்லும்படி பிக்பாஸ் கூறியிருந்தார்.
அதனால் பெண்கள் அணியினர் யாரை அனுப்ப முடிவெடுக்க டிஸ்கஸ் செய்ததில் பவித்ராவை அனுப்ப முடிவெடுத்தனர்.
இதனால் ஜாக்குலினுக்கும் பவித்ராவுக்கு வாய் வாக்குவாதம் ஆரம்பித்து வித்ரா அங்கு சென்றால் பாவம் பார்ப்பார்கள் என்று ஜாக்குலின் கூற, பாவம்னு பார்த்து அனுப்பாதீங்க, நான் விளையாடுவேன் என்று தோன்றினால் மட்டும் அனுப்புங்க என்று அழுதபடி சென்றுள்ள பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.