பொம்பள குரல்ல பேசு!! பிக்பாஸ் 8 தர்ஷிகாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் நேற்று அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். போட்டியாளர்களிடம் தன்னுடைய ஸ்டைலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விஜய் சேதுபதி.
போன முதல் நாளே நெட்டிசன்கள் தர்ஷிகா செய்த ஒரு செயலை கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
செளந்தர்யா பிக்பாஸ் வீட்டுக்கு வந்த உடனே விஜய் சேதுபதி அவரிடம் பேசும்போது அவருடைய குரலை தாண்டிய குணத்தை பாராட்டினார்.
அதன்பின் சக போட்டியாளரான தர்ஷிகா, செளந்தர்யாவின் குரலுக்கு என்ன ஆச்சு என அக்கறையுடன் கேட்காமல் பொம்பள குரல்ல பேசு, பெண்மையா பேசு என்று அவரை கிண்டல் செய்திருக்கிறார்.
இது தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி, முதல் ஆளாக அவரை வீட்டைவிட்டு வெளியேற்றுமாறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Okay 1st week eliminate panna aal kedachachu
— Bigg Boss Content (@BB7Pradeep) October 6, 2024
Mocking someone for her voice shows her character 😡 #BiggBossTamil #BiggBossTamil8 #Soundarya pic.twitter.com/v39lSR8x7F