யாரை நம்புறது, நம்பக்கூடாது.. என்னுடைய அடுத்த பிளான் இதுதான்!! உண்மையை கூறிய பிக்பாஸ் ஐஸு..
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸு, வீட்டை விட்டு வெளியேறிய பின் பல நாட்களுக்கு பின் விஜய் டிவி எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார். வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் எனக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் பார்த்தேன். அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சிலரிடம் என் மீது இருந்த எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
சில சூழ்நிலையில் சிலர் வேறுமாதிரியாக இருந்தார்கள். கடினமான போட்டியாளர் என்றால் டாஸ்க், எல்லாவற்றை பற்றியும் பேசும் போது பார்த்தால் மாயா தான் கடினமான போட்டியாளர். அர்ச்சனா, விசித்ரா இருவரும் கடினமான போட்டியாளர்கள் தான். எனக்கு வீட்டில் இருப்பவர்கள் எல்லாரையும் பிடிக்கும். தனிப்பட்ட விசயத்திலும் வெளியில் வந்த பிறகும் என்னுடைய பேவரெட் போட்டியாளர் பிரதீப் தான். மாயாவை ரொம்பவே பிடிக்கும், சிறந்த தோழி, கலைஞர்.
விசித்ராவையும் பிடிக்கும். விஷ்ணு அண்ணாவையும் பிடிக்கும். எனக்கு டாஸ்க் நடக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, நிறைய கத்துக்கிட்டேன், பெரிய லெசன். எனக்கு உள்ளே இருக்கும் போது தெரியவில்லை, வெளியில் வந்த போது இவ்வளவு மாற்றம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.
என் நல்ல விசயங்கள் எல்லாமே எனக்கு ஒரு ஸ்டோரி புத்தகம் மாதிரி தான். நிறைய கேட்டால் நம்பாத, பார்த்தால் நம்பு என்பதை கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையில் எல்லாத்தையும் கற்றுக் கொடுத்தது. யாரை நம்புறது நம்பக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன் என்னிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் ஐஸு தெரிவித்தார்.
இப்போது சில காலம் பிரேக் எடுத்திருக்கிறேன். எதாவது இருந்தால் நான் அப்டேட் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். எவிக்ஷன் ஆனது பற்றி, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். வெளியில் வந்தபோது இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் என்று யோசித்தேன்.
கவலையாக இருந்தது. உண்மையாக விளையாடியது யார் என்றால் எல்லாரும் தான். அப்படி உண்மையாக விளையாடாதவர்கள் யார் என்ற உணர்வு இல்லை. எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்த மக்களுக்கு இனியும் எனக்கு அதை கொடுக்கவேண்டும். விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஐஸு தெரிவித்துள்ளார்.