இளையராஜாவால் அவமானப்பட்டு தன்மானத்தை இழந்தவர்கள்!! அதில் ரஜினிகாந்தும் ஒருவர்!! பிரபலம்..
இசைஞானி இளையராஜா சமீபகாலமாக தன்னுடைய பாடலை பயன்படுத்த ராயல்டி பெற்று இசையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தின் டைட்டில் பிரமோ வீடியோவில் இளையராஜா இசையமைத்த இசையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு இளையராஜா வழக்கும் தொடுத்துள்ளது பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.
இதுபற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார். ராயல்டிக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தயாரிப்பாளர்கள் தான், ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இசையமைப்பாளர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. அதை பயன்படுத்தி தான் இளையராஜா போன்ற்வர்கள் காப்புரிமை கேட்டு சம்பாதித்து வருகிறார்கள். அதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் அப்போதில் இருந்தே அடிமைகளாக இருந்து வருகிறார்கள். சில நொடிகள் மட்டுமே கூலி படத்தில் பயன்படுத்தப்பட்டது.
இதற்கு தங்க மகன் படத்தின் தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் தான் காப்புரிமை கேட்டிருக்க வேண்டும். ஆனால், இளையராஜா துறுதுறுவென வக்கீல் நோட்டிஸ் அனுப்பியது அதிகபடியான செயலாகத்தான் இருக்கிறது. உங்கள் பாட்டை பயன்படுத்துகிறார்கள் அதை வாங்கிட்டு போங்கள், ஏற்கனவே ஃபைட் கிளப் படத்திலும் விக்ரம் படத்திலும் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி இருக்கிறார்.
கமல் அந்தகாலத்தில் நடித்த விக்ரம் படத்தில் அமைந்த பாடலை சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார், அதில் என்ன தப்பு இருக்க முடியும். அது ஒரு பக்கம் இருக்க கூலி தன்னுடைய நண்பர் ரஜினியின் படம், படம் வெளியான பின் அதுபற்றி கிளைம் பண்ணிக்கலாம் என்று பெருந்தன்மையோடு இருக்கவில்லை இளையராஜா. இளையராஜா விசயத்தில் அவரை சாமி என்றும் கடவுள் அளவிற்கு பழகினார்.
விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே தனுஷின் மகன் 12+ இவ்ளோ மார்க் எடுத்துட்டாரு.. ரஜினிக்கு பெருமை சேர்த்த யாத்ரா..
அப்படிப்பட்ட ரஜினிகாந்த் மீதான கோபம் தான் இதை செய்திருக்கிறார் இளையராஜா. ஒரு காலத்தில் இளையாராஜா பலமுறை தங்களை அவமானபடுத்தியதை எல்லாம் சகித்துக்கொண்டு, சுயமரியாதை தன்மானத்தை இழந்து அவர் பின்னால் தான் நின்றார்கள். அதில் ஒருவர் ரஜினிகாந்த். அவர் அவமானத்தை பொருத்து நின்றவர்களுக்கு மத்தியில் தான், கே பாலச்சந்தர் - மணிரத்னம் இதனை கண்டிக்கும் விதத்தில் தான் ஏ ஆர் ரகுமான் என்பவரை கொண்டு வந்தார்கள்.
ரோஜா படம் ஹிட்டான பின், ரஜினி, கமல் எல்லோரும் ஏ ஆர் ரகுமான் பின்பு சென்றுவிட்டார்கள். இதனால் தான் இளையராஜா மறைமுகமாகவும் வெளித்தோற்றத்தில் நாடகமாகி ரஜினிமேல் இருந்த கோபத்தை காட்டி வருகிறார் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.