ரொம்பவே நெருக்கமா இருந்தோம், அதுவும் அந்த மாதிரி.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?
2010 -ம் ஆண்டு வெளியான அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் பிளாக் பாண்டி. இதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிளாக் பாண்டி, அஞ்சலி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நானும் அஞ்சலியும் அங்காடித் தெரு படத்திற்கு முன்பு எங்கள் இடையே பழக்கம் இருந்தது. ரொம்ப நெருக்கமான பழக்கம்தான்.
நானும் அவரும் நடன அமைப்பாளர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள்.அஞ்சலி நடனம் ஆடும் போது ஒழுங்கா ஆடு என்று சொல்லி கிண்டல் செய்வேன்.
அங்காடித் தெரு படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலி உடன் இணைந்து நடித்தேன் . அந்த சமயத்தில் அஞ்சலி என்னுடன் சரியாக பேசவில்லை. நான் இது தொடர்பாக அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்று பதில் அளித்தார்.
யாரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் தானே என்பது கடைசியில் புரிந்துகொண்டேன் என்று பிளாக் பாண்டி கூறியுள்ளார்.