மொட்டை அடிச்சிட்டு போனதால வாய்ப்பு கிடைச்சிது!! நடிகர் போஸ் வெங்கட் கூறிய ரகசியம்..
தமிழ் சினிமாவில் குணத்திர ரோல், வில்லன் ரோல் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். ஈர நிலம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் போஸ், சிவாஜி, சிங்கம், கோ, யான், விலாசம், ஆராது சினம், தொடரி, கவண், திரன் அதிகாரம் ஒன்று, கடல் குதிரை, குற்ற செயல், யானை, அயோத்தி, குலசாமி, நந்தி வர்மன், யாவரும் வல்லவரே உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அவர் நடிப்பில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்த கவண் படம் மிகப்பெரிய ஒரு இடத்தினை கொடுத்தது. அரசியல்வாதியாக விஜய் சேதுபதி பேட்டியெடுக்கும் காட்சிகள் இன்று வரை அனைவராலும் புகழப்பட்டு வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கவண் படத்தின் பேட்டியெடுக்கும் காட்சியில் ஸ்கிரிப்ட் கொடுக்கும் போது என்ன ரியாக்ஷன் இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
கவண் படத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். அப்போது நான் ஸ்ரீலங்காவில் இருந்தேன். அப்படத்தின் முதல் ஷூட்டிங்கே அந்த காட்சி தான். கே வி ஆனந்த் என்னொட நண்பர் என்பதால் எனக்கு 3 போட்டோ அனுப்பி இருக்கேன், கதை அனுப்பி இருக்கேன்.
இது யார் நல்ல இருக்கானு பாரு, 2 மலையாளி, ஒரு தெலுங்குகாரர். மூணு பேருக்கும் முடியில்லை அது தான் ஒற்றுமை, என்னை ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்விக்கு பதிலாக அடுத்த நாள் முன் பக்க முடியை ஷேவ் பண்ணிவிட்டேன்.
திராவிட கழகத்தில் இருப்பதால் அந்த உடையை நான் போட்டு, கூட 4 பேரை அழைத்து ஆபிஸ்க்கு சென்றுவிட்டேன். கட்சிக்காரங்க வந்துட்டாங்க என்று இருந்தவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். என்னை பார்த்ததும் ஏன் இப்படி செய்தீர்கள் என்றதும், மொட்டை தான் பிரச்சனை எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி தான் அந்த வாய்ப்பை பெற்றேன்.
அதன்பின் 2 நாளில் ஷூட்டிங் என்றதும் நான் வந்தேன். 5 நாள் மட்டும் ஷூட் என்பதால் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன்பின் விஜய் சேதுபதியிடம் இதுபற்றி பேசிவிட்டு சிங்கிள் சிங்கிள் ஷாட் எடுத்து 5 டேக்கில் அந்த 4நிமிட காட்சியை ஒரே நாளில் முடித்து கொடுத்துவிட்டோம் என்று போஸ் வெங்கட் தெரிவித்திருக்கிறார்.