நள்ளிரவில் சின்ன பையன் கூப்பிட்டு ரொம்ப தரைகுறைவா நடந்தான், அதுவும் ரொம்ப.. நடிகை ஜெயலட்சுமி பேட்டி
சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாகி நடித்து பிரபலமானவர் தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி, எனக்கு நள்ளிரவில் போன் வந்தது.அந்த போனில் பேசியது ஒரு பையன். அவன் ரொம்ப மோசமாக பேசினான். பெண்களுடன் இப்படி அப்படி பேச கூடாதோ அதை எல்லாம் என்கிட்ட பேசினேன்.
அப்போது நான் அவனிடம், "நேரடியாக போன் நம்பரில் இருந்து பேசக்கூடிய அளவிற்கு உனக்கு தைரியம் இருக்கா. நீ அழைத்து இருக்கும் நம்பரை வைத்து உன்னை கண்டுபிடிக்கிறேன், போலீசில் புகார் கொடுப்பேன்" என்று கூறினார்.
அதற்கு அவன், காவல்துறையால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது என்றான். இது தொடர்பாக போலீசில் புகார் அழைத்த பிறகு அந்த நபர் என்னை அழைத்து மீண்டும் மிரட்டினான் என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார்.