வசமாக சிக்கிய மாகாபா ஆனந்த்!! அந்த நிகழ்ச்சியில் சிக்கும் 50 பேர்..
விஜய் டிவி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் பணியாறி பிரபலமான மாகாபா ஆனந்த், விஜே பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பணியாற்றி வந்தனர்.
சமீபத்தில் கூட குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஏதும் வாய்த்திறக்காமலும் மணிமேகலையை மறைமுகமாக சோசியல் மீடியாவில் கலாய்த்தும் வந்தார்.
மாகாபா ஆனந்த்
இந்நிலையில், பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் மாகாபா ஆனந்த், திருச்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாக கூறப்படுகிறது.
அதற்கு முறையான அனுமதி வாங்காமல் ரோட்டில் பிரமாண்ட செட் போட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கும் போது உடற்பயிற்சிக்கு விழிப்புணர்வு செய்யப்போகிறோம் என்று கூறித்தான் அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால், ஸ்ட்ரீட் டே கொண்டாடப்பட்டதாகவும் 2000 பேருக்கும் மேற்பட்டோர் கூடியதாகவும் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டதால் பலர் ஏமாந்து திரும்பி போனதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாகாபா ஆனந்தும் சிக்கியுள்ளது சின்னத்திரையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.