சல்மான் கான் முதல் திரிஷா வரை!! இத்தனை பேருக்கு திருமணம் நின்னு போச்சு..
சினிமாத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் ஒரு கட்டத்தில் சினிமாவில் வசதியான பின் திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிக்க ஆரம்பிப்பார்கள்.
ஆனால் ஒருசிலருக்கு திருமணம் என்பது ஒரு அதிர்ஷ்டம் இல்லாதது போல் மாறி நிச்சயம் வரை சென்று நின்று போயிருக்கும். அப்படி சினிமாத்துறையில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் யார் யாருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நின்று போனது என்பதை பார்ப்போம்..
சல்மான் கான் முதல் திரிஷா வரை
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான் கான், இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு முன் பல நடிகைகளிடம் காதலில் இருந்த சல்மான் கான், நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் நிச்சயதார்த்தம் நடந்து அழைப்பிதழ் எல்லாம் அச்சடிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நின்று போய், சங்கீதா முகமது அசாருதீனை மணந்தார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்வதற்கு முன் நடிகை கரிஷ்மா கபூருடன் 5 ஆண்டுகள் காதலித்து வந்தார். பின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் 4 மாதங்களில் பிரிந்துவிட்டார்கள்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை ரவீணா டாண்டனும் காதலித்து நிச்சயம் நடந்ததாக கூறப்பட்டு பின் திருமணம் நடக்காமல் போனதாம்.
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மாடல் அழகி குர்ப்ரீத் கில்லும் காதலித்து நிச்சயம் நடந்து திருமணத்தை அறிப்பார்கள் என்று எதிர்பார்த்தபோது இருவரும் பிரிந்துவிட்டனர்.
தென்னிந்திய சினிமாவின் குயின் என்று அழைக்கப்படும் நடிகை வர்ண் மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து சில காரணங்களால் திருமணம் நின்று போனது. தற்போது மாஸ் நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்.