பிரியா பவானி சங்கருக்கு பதில் நீயான்னு கழுவி ஊத்துனாங்க.. அழுதுட்டேன்!! சைத்ரா செட்டியின் மறுப்பக்கம்..
சைத்ரா ரெட்டி
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று கயல். இதில், சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
நாயகிகளில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சைத்ரா, ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தான் நடித்த முதல் சீரியலில் ஒரு நடிகைக்கு பதிலாக நடித்த போது பட்ட கஷ்டத்தை பகிர்ந்துள்ளார்.
கல்யாணம் முதல் காதல் வரை
அதில், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில், பிரியா பவானி சங்கருக்கு பதிலாக 4 மாதம் நடித்தேன். மிகப்பெரிய ஹிட் தானே, அப்போது தான் நான் பெரிய நெகட்டிவ் கமெண்ட்-ஐ என் வாழ்க்கையில் பார்க்கிறேன். அப்போது எனக்கு 23 வயசு, அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
என்ன பண்றது, அவங்க தானே என்னை கூப்பிட்டு வந்தாங்க, நானே வந்தேன் என்று தோண்றியது. அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது, டப்பிங் வேற ஒருத்தர் பண்ணாங்க, பிராம்டிங் கூட எடுக்கத்தெரியாது.
இதனால் ஸ்பாட்டில் அழுது இருக்கிறேன். அதன்பின் இயக்குநர் சரியான அறிவுரை கூறி 4 மாதம் நடிக்க வைத்தார் என்று சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார்.