இன்று ஜெயம் ரவி - ஆர்த்தி.. நாளை சூர்யா - ஜோதிகா தான்!! எச்சரித்த பிரபலம்..

Jayam Ravi Suriya Jyothika Gossip Today Aarti Ravi
By Edward Sep 11, 2024 08:00 AM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி

தமிழ் சினிமாவில் ஆண்டு ஒன்றுக்கு முன்னணி நட்சத்திரங்களின் விவாகரத்து நடந்து கொண்டிருக்கிறது. சமந்தா - நாக சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா, இமான் - மோனிஷா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி உள்ளிட்ட பலர் சமீபகாலமாக விவாகரத்து பெற்றிருந்தனர்.

இன்று ஜெயம் ரவி - ஆர்த்தி.. நாளை சூர்யா - ஜோதிகா தான்!! எச்சரித்த பிரபலம்.. | Che Guevara Slams Jayam Ravi And Aarthi Divorce

தற்போது நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது என்று ஆர்த்தி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

சேகுவாரா

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜெயம் ரவி செய்த பெரிய தப்பு, வேலையையும் தன் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றாக வைத்ததுதான். திருமணத்திற்கு பின் ஹெயம் ரவியின் மாமியார் தான் அனைத்தையும் பார்த்து வந்தார். கால்ஷீட் கொடுப்பது முதல் கதை கேட்பது வரை அவர்தான் தீர்மானிப்பார்.

ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்தும் ஆர்த்தி இன்னும் ரவி பெயரை போட்டுக்கொண்டுள்ளார். இதனால் இன்னும் ஜெயம் ரவி விவாகரத்து பூர்த்தியாகவில்லை என்று அர்த்தம்.

இன்று ஜெயம் ரவி - ஆர்த்தி.. நாளை சூர்யா - ஜோதிகா தான்!! எச்சரித்த பிரபலம்.. | Che Guevara Slams Jayam Ravi And Aarthi Divorce

ஜெயம் ரவி அறிக்கையில் என் நெருக்கமானவர்களின் தனி உரிமைக்காக நான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொல்லியிருப்பது ஆர்த்திக்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் வேறொருவருடன் தொடர்பு என்று நெகட்டிவ் விமர்சனம் வந்ததில்லை. இதில் பிரச்சனையே மாமியார்தான். திருமணமாகிவிட்டால் அப்பா, அம்மா ஒரு ஸ்டெப் பின்னாடி நிற்க வேண்டுமே தவிர கணவன் மனைவிக்கு இடையில் வந்து வாழ்க்கையை கெடுக்கக்கூடாது.

இதே சிக்கல் ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் இருக்கும், இதை நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். வேலையையும் தன் தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்தால் மட்டும்தான் தப்பிக்க முடியும்.

இன்று ஜெயம் ரவி - ஆர்த்தி.. நாளை சூர்யா - ஜோதிகா தான்!! எச்சரித்த பிரபலம்.. | Che Guevara Slams Jayam Ravi And Aarthi Divorce

நாளை சூர்யா - ஜோதிகா

இன்று ஜெயம் ரவி - ஆர்த்தி, நாளை சூர்யா - ஜோதிகாவாக இருக்கலாம். கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். திருமணமாகி 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டார்கள், இனிமேல் விவாகரத்து செய்து என்ன செய்யப்போகிறார்கள் என்று சேகுவாரா பேசியிருக்கிறார்.

பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவலை பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறியதைத்தான் விடுப்பு தளத்தில் பகிர்ந்திருக்கிறோம். மற்றபடி விடுப்பு தளத்திற்கு இந்த கருத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.