கீர்த்தி சுரேஷ் மேல் அப்படியொரு வெறி!! இளைஞரை வைத்து 40 லட்சம் ஆட்டையை போட்டன்பெண்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகர் கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பால் பல ரசிகர்களை ஈர்த்து வரும் கீர்த்துக்கு அவரது ரசிகர்கள் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கீர்த்திக்கு தனியான பேஃன் பேஜ்-களை உருவாக்கி ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பரசுராமன், ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக மாதம் ரூ.30,000 சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். பரசுராமன் போலி அக்கௌன்ட் வைத்து இருக்கும் மஞ்சுளாவுடன் .வாட்ஸாப் மூலம் பேசி காதல் வலையில் சிக்கியுள்ளார். மஞ்சுளா பணம் கேட்க்கும் போதெல்லாம் பரசுராம் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை காட்டி பரசுராமின் அந்தரங்க புகைப்படத்தை வாங்கியுள்ளார் மஞ்சுளா. பின்னர் மஞ்சுளா இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பரசுராமை ப்ளாக்மைல் செய்து ரூ.40 லட்சம் வாங்கியுள்ளனர். இதன்மூலம் 100 கிராம் தங்கம், கார், பைக் என பொருள்களை வாங்கி குவித்துள்ள மஞ்சுளா, வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். பரசுராமன் வேறு வழி இல்லாமல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் விசாரணையில் மஞ்சுளா கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதற்க்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மஞ்சுளாவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.