வீல் சேரில் வந்த செஃப் தாமு! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கண் கலங்க வைத்த சம்பவம்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கான்செப்டில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு ரியாலிட்டி ஷோவாக வலம் வரும் இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதால் மற்ற மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.
முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த சீசன்களை வெற்றிகரமாக ஒளிபரப்ப இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த மே 4ம் தேதி தொடங்கப்பட்டுள்ள குக் வித் கோமாளி 6 சீசனில் நடுவராக தாமு, மாதப்பட்டி ரங்கராஜன் என மூன்று நடுவர்கள் உள்ளனர்.
கண் கலங்கும் சம்பவம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தாமு பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " எனக்கு பத்மபூஷன் விருது சமீபத்தில் தான் கிடைத்தது. அந்த விருது 40 வருட கனவாக இருந்தது. அதுவும் சமையல் துறையில் எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.
ஆனால் நான் விருது வாங்கிவிட்டு இறங்கும்போது கால் பிரண்டு கீழே விழுந்து விட்டேன். அப்போது இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.
அதனால் நான் இப்போது ஷூட்டிங்கிற்கு வீல் சேரில் தான் வந்து கொண்டிருக்கிறேன். விரைவில் எனக்கு குணமடைந்து விடும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.