நாக சைதன்யா உடன் விவாகரத்து.. கண்கலங்கிய சமந்தா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!
விவாகரத்து
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர்.
இதனையடுத்து சமந்தா தன்னுடைய சினிமாவில்கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார்.
இந்த சூழலில் நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். அது தொடர்பான செய்திகள் இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
பத்திரிக்கையாளர் சேகுவேரா
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சேகுவேரா சமந்தா குறித்து பேசியுள்ளார். அதில் அவர்,
"தெலுங்கு நடிகரிடம் இருந்து சமந்தா 25 கோடி கடன் வாங்கியதாக தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்.. நாக சைதன்யா சமந்தா சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய நினைத்தார். அதன்படி விவாகரத்தும் செய்துகொண்டனர்".
"சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் கொடுக்க நாகார்ஜுனா தரப்பு தயாராக இருந்தனர். ஆனால் சமந்தாவோ நாகார்ஜுனவிடமே நேரடியாக எனக்கு அந்த பணம் வேண்டாம் என்று கண்ணீரோடு சொல்லிவிட்டார்" என சேகுவேரா தெரிவித்துள்ளார்.