அடுத்தடுத்து இரண்டு புயலா ! என்ன ஆகப்போகுதோ சென்னை..

chennai Flood red alret
By Jeeva Nov 07, 2021 10:30 AM GMT
Report

சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் எங்கும் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்வும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா எனவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.