தமிழில் வளர்ந்துவிட்டு நடிகை சங்கீதா இப்படி பேசலாமா!! வெளுத்து வாங்கிய பிரபலம்...
தமிழை பிடிக்காது
பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சங்கீதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடிப்பில் வெளியான பிதாமகன் படம் மிகப்பெரிய இடத்தை அவருக்கு கொடுத்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நான் நடித்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு தமிழைவிட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும். அதற்கு காரணம், எனக்கு தமிழைவிட தெலுங்கில் நல்ல மரியாதை கிடைக்கிறது, நான் தமிழை பிடிக்காது என பேசுவதால் தமிழ் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. உண்மையை நாம் கூறிதான் ஆகவேண்டும்.
தமிழில் நடிக்கும்போது சரியான மரியாதை கிடைக்காது. தமிழில் யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. தெலுங்கில் நல்ல வரவேற்பு எனக்கு கிடைக்கிறது. நல்ல சம்பளம், நிறைய வாய்ப்புகளும் கிடைக்கிறது போன்ற சில கருத்துக்களை கூறியிருந்தார் சங்கீதா.
செய்யாறு பாலு
இதுகுறித்து செய்யாறு பாலு அளித்த பேட்டியில் விமர்சித்து பேசியிருக்கிறார். ரசிகா படத்தில் அறிமுகமான சங்கீதா, பல படங்களில் நடித்தும் இவருக்கு சரியான இடம் சினிமாவில் கிடைக்கவில்லை. தெலுங்கு சினிமாத்துறையை அதிகம் பிடிக்கும் என்று சொல்ல அவருக்கு கட்டாயம் உரிமையுள்ளது.
ஆனால் தமிழ் பிடிக்காது என்றும் தமிழில் தனக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள் என்று பேசுவதும் ஏற்புடையதல்ல. பிதாமகன் படம்தான் அவருக்கு வாழ்க்கையை கொடுத்தது. வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக மாஞ்சோலை எனும் படத்தில் நடித்த சங்கீதா தமிழ்நாட்டில் தான் வளர்ந்து நடிகையாக உருவாகினார்.
ஆனால் தமிழ் சினிமாவை பற்றி இப்படி கேவலமாக பேசுவது வளர்ந்த பின் தெலுங்கு தான் மரியாதை கொடுக்கிறது என்று பேசுவது ரொம்பவும் தவறான விஷயம் என்று செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.