அதெல்லாம் என்னால் பண்ண முடியாது.. சிவகார்த்திகேயன் உடன் நடிக்க அப்படி கண்டிஷன் போட்ட நயன்தாரா..
நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை கவர்ந்த இவருக்கு, படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட சிவகார்த்திகேயன், பல வெற்றி படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக மாறிவிட்டார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா வேலைக்காரன் படத்தில் நடிக்க நிறைய கண்டிஷன்கள் போட்டார். ஸ்ரீ திவ்யா போல என்னை கையாள கூடாது. ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களை வைக்க கூடாது. என்னை லேடி சூப்பர் ஸ்டார் போல காட்டவேண்டும். எக்கச்சக்க கண்டிஷன் போட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
அதன் பின்னர் mr local படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு காரணம், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் நடந்த கொண்ட விதம், பணிவு தான் காரணம் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.