சமந்தாவை ஏன் யா போட்டு படுத்துறீங்க,.. கொந்தளித்து பேசிய பிரபலம்..

Samantha Gossip Today Tamil Actress
By Edward Oct 05, 2024 09:36 AM GMT
Edward

Edward

Report

சமந்தா பிரச்சனை

தென்னிந்திய சினிமாவில் பெரியளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் பிரச்சனை தான் சமந்தாவை பற்றி அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற சினிமாவையும் அதிரவைத்துள்ளது.

சமந்தாவை ஏன் யா போட்டு படுத்துறீங்க,.. கொந்தளித்து பேசிய பிரபலம்.. | Cheyyaru Balu Supports To Samantha Minister Issues

இதுகுறித்து சமந்தா, நாக சைதன்யா, நாகர்ஜுனா, அமலா உள்ளிட்ட பலரும் கொண்டா சுரேகவை வெளுத்து வாங்கினர். இதற்காக கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்டும் சமந்தா மற்றும் தன் குடும்பத்தினை அவதூறாக பேசியதற்காக நாகர்ஜுனா வழக்கும் தொடுத்துள்ளார்.

செய்யாறு பாலு

இதுகுறித்து பல பத்திரிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். சமந்தாவை அமைச்சர் அவதூறாக பேசியிருக்கிறார், அந்தப்பெண்ணை ஏன் யா போட்டு படுத்துறீங்க. சமந்தா பல்லாவரத்தை சேர்ந்த பெண். சென்னையில் பள்ளி, கல்லூரி படித்தப்பெண்.

மாடலிங்கில் கவனம் சென்று ரிசப்சனிஸ்ட் வேலை பார்த்து பின் நடிக்கும் ஆசை வந்து பெரிய கம்பெனியில் அழைப்பு வந்து சந்தோஷத்தில் இருந்தார். ஒன்றரை நாள் நடித்தப்பின் ஷூட்டிங்கிற்கு அழைப்பு வரவில்லை. புரொக்‌ஷன் மேனேஜரும் போனை எடுக்கவில்லை.

சமந்தாவை ஏன் யா போட்டு படுத்துறீங்க,.. கொந்தளித்து பேசிய பிரபலம்.. | Cheyyaru Balu Supports To Samantha Minister Issues

பொறுத்து பார்த்த சமந்தா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று கேட்டபோது, இந்த ரோலுக்கு உங்கள் ஸ்கின் டோன் செட்டாகவில்லை என்று இயக்குநர் சொன்னதாக கூறியிருக்கிறார்கள்.

அது அவருக்கு அவமானமாகிவிட்டதால், விடாத சமந்தா தொடர்ந்து முயற்சி சென்று மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்து அறிமுகமாகினார். படம் சரியாக போகாவிட்டாலும் சமந்தாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்படி கஷ்டங்களை சந்தித்து வந்தவர் தான் சமந்தா என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் செய்யாறு பாலு.