நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம்.. போராடிக்கொண்டு இருக்கும் சமந்தா!!
பிரபல நடிகரின் மகனான நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளிவந்த நிலையில், அண்மையில் இவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, "சமந்தா, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் இந்த உயரத்திற்கு வர முக்கிய காரணம் அவருடைய உழைப்பு மட்டுமே. சமந்தா நாக சைத்னயா விவாகரத்து செய்துகொண்ட போது அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது".
"சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை, வேறு நடிகருடன் தொடர்பு என பல மோசமான விமர்சனங்களை அவர் மீது முன் வைத்தனர். இப்படி பல விமர்சனங்களை சமந்தா எதிர்கொண்டார். விமர்சனம் ஒரு பக்கம், அரியவகை நோய் ஒரு பக்கம் என சமந்தா போராடி வருகிறார். இந்த சூழலில், நாக சைதன்யா திருமணம் பற்றிய அறிவிப்பு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது".
"இவர்கள் இருவரும் 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர், ஆனால் சமந்தா நோயுடன் போராடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நாக சைதன்யா இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ளலாமா?" என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
You May Like This Video