நான் மட்டும் தான் அதை பண்ணேனா? திரிஷா குறித்து கொந்தளித்து பேசிய பிரபலம்..
பிரபல கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு, கட்சியின் பொதுச்செயலாளர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து பேசியுள்ள விசயம் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி, நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய், எம் எல் ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்று எனக்கு தெரியும்.
நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாச்சலம் அடம் பிடித்தார் என்றும் கருணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் திரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஏ வி ராஜு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதை பற்றி பேசினால் ரொம்பவும் ஆபாசமாகிவிடும். சில மாதங்களுக்கு முன் திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் பேசியதை பலர் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, நீதிமன்றம் வரை இழுத்துவிட்டனர். அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து மன உளைச்சலுக்கு உண்டாக்கிய ஒரு விசயம்.
இந்த அதிமுக பிரமுகர், கூவாத்தூரில் ஜெயலலிதா மறைந்த பின் 122 எம் எல் ஏக்காளை சசிகலா தங்கவைத்தார். குறிப்பிட்ட எம் எல் ஏ, நடிகை திரிஷா வேண்டும் புக் பண்ணிக்கொடுங்க என்று ஊடகத்தில் பேட்டியளித்தார். இது உண்மையா பொய்யா? இது குறித்து திரிஷா என்ன கேள்வி கேட்பார், நடிகர் சங்கத்தில் புகாரளிப்பாரா என்று ஒரு கேள்வி இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதி, நடிகையை பற்றி பேசிய வீடியோ அனைவரிடமும் சென்று வைரலாகியது.
மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு கொடுப்பீர்கள், ஒரு அரசியல்வாதி பேசியதற்கு எதுவும் பேசாமல் இருப்பீர்களா?. அப்படியே சில ஆண்டுகளுக்கு முன் செல்வோம். ஒரு விபச்சார வழக்கில் கைதான நடிகை பூனைக்கண் புவனேஸ்வரி பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசினார். என்னை விபச்சாரி என்று கூறுகிறீர்கள், நான் மட்டும் தான் விபச்சாரம் பண்ணுகிறேனா? ஒருசில நடிகைகளின் பெயர்களை கூறி அவர்களும் அதை பண்ணுகிறார்கள்.
ஆனால் அதை அந்த முக்கியமான நாளிதழில் அந்த மஞ்சள் பத்திரிக்கை, அவர்களின் பெயர்களை அப்படியே போட்டிருக்கிறார்கள். அதற்கு நடிகர் சங்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து, அந்த செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார், மன்னிப்பும் கேட்டார். இப்போது பெயரை சொல்லியாச்சி, எல்லாமே சொல்லியாச்சி, வைரலாகி போய்க்கிட்டே இருக்கிறது. மன்சூர் அலிகானுக்கு தக்காளி சட்டினி, உங்களுக்கு வந்தா ரத்தமா, அதுக்கு மட்டும் குரல் கொடுத்தீர்களே இதற்கு என்ன சொல்லபோகிறீர்கள்.
எல்லா நடிகைகளும் இப்படி தானா என்று எல்லாருடைய பார்வை போகும். இங்கு இருக்கும் சங்கங்கள் என்ன செய்ய போகிறீர்கள், என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள். அந்த நடிகை (திரிஷா) என்ன பதில் சொல்ல போகிறார். சாதாரணமானவன் மாட்டினால் அடிப்பது, வலிமையானவன் மாட்டினால் கண்டுக்கொள்ளாமல் இருப்பது. இது குறித்து திரிஷா, நடிகர் சங்கத்தினர் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று பொறுத்து பார்ப்போம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.