பாடல் எழுதிய வைரமுத்து!! விஜய் சேதுபதி படத்தை பார்க்கவே மாட்டேன் என்று சாபமிட்ட பாடகி..
இயக்குனர் நித்திலம் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் மகாராஜா. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நத் இசையமைத்து கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத்தியுள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தை நான் பார்க்கப்போவதில்லை என்று பாடகி சின்மயி சபதம் போட்டிருக்கிறார். அவரின் எக்ஸ் தள பக்கத்தில், பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை பற்றி பேசும் மகாராஜா படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியது எனக்கு இப்போது தான் தெரிய வந்தது.
உலகிலேயே தமிழ்த்துறையில் மட்டும் தான் தங்களுக்கு பிடித்த ஒருவரை துஷ்பிரயோகம் செய்பவர் என்று சொன்னதால் வேலை செய்யவிடாமல் தடை விதித்திருக்கிறது. அதனால் அப்படத்தை பார்க்க நினைக்கவில்லை. அந்த படத்தை பார்த்து கருத்து கூறிய பத்திரிக்கையாளர் ஆஷாமீரா துன்புறுத்தபட்டது பற்றியும் இப்போது தான் தெரியவந்தது.
தமிழ்த்திரையுலகில் அதிகாரம் படைத்தவர்கள் ஏதாவது நல்லது, சரியான விஷயத்தை செய்வார்கள் என்று நான் நம்பினேன். ஆனால் மீண்டும் மீண்டும் அது ஏமாற்றமாக அமைகிறது. பாலியல் தொல்லை, பலாத்காரம் செய்தவர்களை பிரமோட் செய்யும் அனைவரும் அதற்கான பலனை பல மடங்கு அனுபவிப்பார்கள் என்று சின்மயி கொந்தளித்து இந்த கருத்தினை பகிர்ந்துள்ளார்.
I sadly, just got to know Vairamuthu wrote the lyrics in Maharaja - a film that talks about rape and sexual abuse.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 25, 2024
The Tamil Industry is the ONLY one in the WORLD to actually ban someone from working because I named their favourite molester.
I dont think I am going to watch…