நீ இன்னும் சாகலையா? யாஷிகாவை படுமோசமாக திட்டிய நபருக்கு பதிலடி
தமிழ் சினிமாவில் க்ளாமர் நடிகையாக வந்தவர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் யாஷிகா. பிக்பாஸ் கொடுத்த வரவேற்பால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.
4 மாதங்களுக்கு முன் தோழியுடன் பார்ட்டி முடித்து வீடு திரும்பிபோது கார் விபத்து ஏற்பட்டு தோழி மரணமடைந்தார். கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சமீபத்திய புகைப்படங்களையும் வெளியிட்டார். 4 மாதங்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தித்தார்.
இந்நிலையில் டிசர்ட்டுடன் தன்னுடைய முடியில் கலரிங் போட்டுள்ளே என்ற பதிவினை போட்டுள்ளார். அதற்கு ஒரு நபர் நீ இன்னும் சாகலையா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு யாஷிகா, நான் சீக்கிரம் சாகனும்னு வேண்டிக்கோங்க என்று பதிலடித்தார்.
அதற்கு அந்த நபர் நிச்சயம் வேண்டிக்கொள்கிறேன் என்று பதில் மெசேஜ் செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் பலர் யாஷிகாவின் இந்த புகைப்படத்தை கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.