சிம்புவை பார்த்து டான்சர்ஸே பயப்படுவாங்க! விஜய்யை சைட் அடித்தேன்! உண்மையை கூறிய சாந்தி மாஸ்டர்..
சினிமாவை பொருத்தவரை நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர்கள் பற்றிதான் பெரும்பாலும் பேசப்பட்டு வருவது. அவர்களை தாண்டி படத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் நடன இயக்குநர்கள், காஸ்டியூம் டிசைனர்கள் என பேசப்படாமல் இருக்கும் பிரபலங்களாக இருப்பார்கள். அந்தவரிசையில் கலா மாஸ்டர், பிரிந்தா மாஸ்டர் போன்ற பெண் நடன இயக்குநர்களுக்கு அடுத்ததாக பேசப்பட்டு வந்தவர் சாந்தி மாஸ்டர்.
90களில் பின்னணி டான்சராக இருந்து தற்போது சில படங்களில் நடன இயக்குநராக திகழ்ந்து வருகிறார். முன்னணி நடிகர்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடனமாடி வருகிறார். சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில் சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். மின்னலே, ஜெமினி, ஆயுத எழுத்து படத்தில் நடனமாடியதுதான் நான் யார் என்ற பேர் கிடைத்தது. பிருந்தா மாஸ்டர் மற்றும் கல்யாண் மாஸ்டருடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றினேன்.
பல படங்களில் வேலை செய்தோம் இருவரும். இதையடுத்து ஒருசில காலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 7 வருடங்களால் பிரேக் எடுத்த பின் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள். இயக்குநர் மணிரத்னம் சார் தான் என்னை நடன இயக்குநராக படத்தில் அறிமுகப்படுத்தினார். 4 ஆயிரம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன், பல மாஸ்டர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.
நடிகர் விஜய்யுடன் நடனமாடும் போது அவரை சைட் அடிப்போம் நாங்கள், நானு அடித்திருக்கிறேன் 24 மணிநேரமும் பார்த்திட்டு இருக்கலாம். தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகர் விஜய் தான் என்றும் நடிகர் சிம்புவுடன் நடனமாட டான்ஸ்டர் பயப்படுவாங்க. அவ்வளவு எனெர்ஜியான நடிகர் சிம்பு. மல்டி டேலண்டராகவும் இருக்கிறார் என்று கூறியுள்ளார் நடன இயக்குநர் சாந்தி.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க.