இப்படி அல்ப்பத்தனமா நடந்துக்கிறீங்க!! பேட்டியில் நடிகை சமந்தாவை கலாய்த்த திவ்யதர்ஷினி..
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை சமந்தா. இதனை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாகினார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதன்பின் தனியாக வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் சமந்தா படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார்.
இதற்கிடையில் நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து அவர் பற்றிய சில வீடியோக்கள் தகவலும் வெளியாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள படத்தின் போது விஜே திவ்யதர்ஷினியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார்.
ஒரு செட்மெண்ட்டில் சமந்தாவின் பர்ஸ் பற்றி கேட்டிருக்கிறார் டிடி. அதற்கு சமந்தா, இது மணி பர்ஸ், இதுல பணம் வைத்துக்கொள்ளலாம் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார். அதற்கு டிடி, நீங்க எவ்வளவு பெரிய ஹீரோயின் தெரியுமா, இப்படி அல்பத்தனமா நடந்துக்கிறீங்களே சமந்தா என்று கலாய்த்துள்ளார். இதை சமந்தா காமெடியாக எடுத்துக்கொண்டு விழுந்துவிழுந்து சிரித்திருக்கிறார்.