மகளின் முதல் பிறந்தநாள்.. அப்படி ஒரு விஷயம் செய்த தீபிகா படுகோன்!
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் தீபிகா படுகோன். இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் தான்.
இதன்பின், ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிய தீபிகா படுகோன் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற்றார்.
தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங் உடன் 2018 - ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகள் பிறந்து 1 வருடம் ஆன நிலையில், தற்போது வரை முகத்தை காட்டாமல் இந்த ஜோடி வலம் வருகின்றனர்.
முதல் பிறந்தநாள்!
இந்நிலையில், தற்போது துவாவுக்கு ஒரு வயது நிறைவடைந்துள்ள நிலையில், தீபிகா தன் கையால் கேக் செய்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தீபிகா கேக் பதிவுக்கு உங்கள் மகளுக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு இது என கமெண்ட்கள் வந்துள்ளது.