சிம்புவுக்காக கமலிடம் இத்தனை கோடி கேட்ட நடிகை தீபிகா!! வேண்டவே வேண்டாம்ன்னு தூக்கிய இயக்குனர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு பல்வேறு சறுக்கல்களுக்கு பின் மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய கம்பேக் படத்தினை கொடுத்தார். 100 கோடி வசூலை தந்த மாநாடு படத்திற்கு பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தார் சிம்பு.
எஸ்டிஆரின் 48 வது படத்தில் புதிய அப்டெட் சமீபத்தில் வெளியானது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை இயக்கிய தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கவுள்ளார். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோனே தான் எஸ்டிஆர்48 படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகை தீபிகா படுகோனே, சிம்புவுடன் ரொமான்ஸ் செய்ய சுமார் 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.
5 ஸ்டார் ஓட்டல், கூட வரும் உதவியாளர்கள் என்று பல செலவுகள் தீபிகா படுகோனேவுக்கு செய்யவிருக்கும் என்று தெரிந்ததால் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களாம் தயாரிப்பு குழுவினர். வேறொரு நடிகையை தேடும் பணியில் இயக்குனர் இறங்கியிருக்கிறாராம்.